கல்லூரி காலங்கள் என்பவை எவ்வளவு காலம் ஆனாலும், எவ்வளவு வயதானாலும் என்றுமே இளமையானது, இனிமையானது.. அத்தகைய காலங்கள் காலத்தால் கலைக்கப்படுவது இல்லை.. எங்களது அத்தகைய நாட்கள் எங்களது காலத்துக்கு பின்னும் இந்த உலகில் நிலைத்திருக்கவேண்டும் என்ற தனியாத உணர்வால் உருவாக்கப்பட்டதுதான் இந்த ”கல்லூரிகாலங்கள்”..
Thursday, December 16, 2010
பிறந்த நாள் வாழ்த்துக்கள்..! - அன்பு
பிரியமிக்க CK,
அன்று..
மூக்கொழுகிய முகத்தோடு
தெரு
மூலையெங்கும் திரிந்த காலம்
ஒருகாலம்..
பண்பட வயது வந்தும்
தினம்
படிப்பு என்றே இருந்த காலம்
ஒருகாலம்..
நட்பு என்பது நாசரம்
என
நகையிட்டுச் சென்ற காலம்
ஒருகாலம்..
தாழ்வு மனப்பான்மையின் பால்
நான்
தலைவனாய் இருந்திட்ட காலம்
ஒருகாலம்..
பேச்சுக் கலை என்பதனை
என்னில்
மூச்சுவிடாது செய்த காலம்
ஒருகாலம்..
பழகுவதின் முறைகளைக் கூட
நான்
பயன்படுத்த தெரியாதிருந்த காலம்
ஒருகாலம்..
நம்பிக்கையின் மீதான
என்
நம்பிக்கையை இழந்திருந்த காலம்
ஒருகாலம்..
ஆனால் இன்று...
இவன்
மாறுபட்ட அன்பு அல்ல
மாற்றப்பட்டவன்..
இவன்
வித்யாசமான அன்பு அல்ல
வித்யாசப் படுத்தப்பட்டவன்..
இவன்
திறம் புகுந்த அன்பு அலல
திறன் புகுத்தப் பட்டவன்..
இவன்
நம்பிக்கை மிகுந்த அன்பு அல்ல
நம்பிக்கையூட்டப்பட்டவன்..
இத்தனையும் என்னில்
மெத்தனமாய் செய்த
நீ...
இன்னும் எத்துனை ஆண்டுகள்
வாழ்ந்தாலும் தகும்..
ஏனெனில்..
உன் பாதையில்
என் போன்ற
ஒரு அன்பு அல்ல..
ஓராயிரம் அன்புக்கள்...!!!
(இது எனது நண்பர் கார்த்திக் பிறந்த நாள் அன்று (17-12-2000) எனது TNPSC-GROUP-II தேர்வு முடித்துவிட்டு, தேர்வறையிலேயே வினாத்தாளில் அவருக்காக நான் எழுதிய கவிதை இது..)
இது இன்று பிறந்த நாள் காணும் அவருக்கு எனது வாழ்த்து மடலாக பரிணமிக்கிறது..
வாழ்த்துக்கள் நண்பரே..
Subscribe to:
Posts (Atom)